பாகிஸ்தான் அணிக்கு விழுந்த மரண அடி… ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகிய மிக முக்கியமான வீரர் !!

பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரரான ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. இதில் 28ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இந்த போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தவித்து வரும் ஷாகின் அப்ரிடி இன்னும் குறைந்தது 5 முதல் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் ஷாகின் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. ஷாகின் அப்ரிடி டி.20 உலககக்கோப்பை தொடருக்கு முன்பாக காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார் என்றும் பாகிஸ்தான் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஷாகின் அப்ரிடி என்ற ஒருவர் இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பலமே இருக்காது என பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்களே பேசி வந்த நிலையில், தற்போது ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஷாகின் அப்ரிடிக்கு பதிலான மாற்று வீரரை பாகிஸ்தான் அணி விரைவாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி;

பாபர் அசாம், ஷாதப் கான், ஆசிப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூஃப், இஃப்திகார் அகமத், குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாநவாஸ், உஸ்மான் காதிர்.

Mohamed:

This website uses cookies.