‘போடா முட்டாள்…’ இங்கிலாந்து முன்னால் வீரரை கடுமையாக திட்டிய கில்கிரிஸ்ட்

PERTH, AUSTRALIA - DECEMBER 15: Adam Gilchrist of the Legends XI looks on during the Twenty20 match between the Perth Scorchers and Australian Legends at Aquinas College on December 15, 2014 in Perth, Australia. (Photo by Will Russell/Getty Images)

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய இடையே  வியாழக்கிழமை நடந்த உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டதில் மைக்கேல் வாகனுக்கும், கில்கிறிஸ்ட்க்கும் மோதல் ஏற்பட்டது.

ஜேஸன் ராயின் அதிரடி ஆட்டம், ஆர்ச்சர், வோக்ஸின் துல்லியமான மிரட்டும் பந்துவீச்சு ஆகியவற்றால் பர்மிங்ஹமில் நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பைனலுக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து அணி.

இதில் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை முதல் 15 ஓவரிலேயே பந்தாடி கொண்டு இருந்தார்.

அப்போது  இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைகேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில்,

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்  கண்டிப்பாக வெறும் கால்களுடன்  பந்து வீச  வேண்டும் என்று பதிவிட்டார்.

இந்த ட்வீட்டை குறிப்பிட்டு ’முட்டாள்’  (இடியட்) என்று பதிவிட்டு ஆஸ்திரேய வீரர் கில்கிறிஸ்ட் மைக்கேல் வானை விமர்சித்தார்.

இதற்கு பதிலடியாக மைக்கேல் வான் வெறும் கால்களுடன் ஜிஃப்ஃபை பதிவிடுவார்.

இங்கிலாந்து உலகக் கோப்பை இறுதிக்கு  முன்னேறியதற்காக ட்விட்டரில் இவ்வளவு அநாகரிகமாக மைக்கேல் வான் நடக்கக் கூடாது என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

 

 

BIRMINGHAM, ENGLAND – JULY 11: Joe Root of England celebrates as Eoin Morgan of England scores the winning runs to secure victory and send England to the final during the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between Australia and England at Edgbaston on July 11, 2019 in Birmingham, England. (Photo by Michael Steele/Getty Images)

 

 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுன் மோதி வெற்றிப் பெற்றது. இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இதனையடுத்து இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன. லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி விளையாட உள்ளதால் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

Sathish Kumar:

This website uses cookies.