பாகிஸ்தானில் உள்ள காபூலில் மே 31-ஆம் தேதி குண்டு வெடித்ததால் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டிய கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
இந்த குண்டு வெடித்ததினால் 90 பேர் உயிர் இழுக்க, 100-க்கும் மேற்பட்டோருக்கு காயம். இந்த தகவல் தெரிந்ததும் பாகிஸ்தானுடன் இந்த ஆண்டில் விளையாடவேண்டிய போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்தது.
இந்த ஆண்டின் கடைசியில் காபூலில் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடப்பதாக இருந்தது. ஆனால், குண்டு வெடிப்புக்கு பிறகு ஜூன் 1-ஆம் தேதி போட்டிகளை ரத்து செய்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
தீவிரவாதிகள் இருக்கும் நாடுகளுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
“பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லாததால் இனிமேல் பாகிஸ்தானுடன் விளையாட உள்ள அனைத்து போட்டிகளையும் ரத்து செய்ய போகிறோம்,” என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.