ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியவுடன் இந்தியாவில் மோதல்.!!
கடந்த வருடம் டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்த வருடம் ஜூன் மாதம் இந்தியா நடத்துகிறது. இந்த போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது ஆப்கானிஸ்தான் அணி.
இந்த வருடம் இந்திய அணிக்கு அதிக வெளிநாட்டு போட்டிகள் உள்ள சமயத்தில் வரும் ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் இந்தியாவில் வந்த ஆபகானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி இந்த அணியின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்துகிறோம் என கூப்பிட்டது. ஆனால் இந்தியாவின் அழைப்பை ஏற்று தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு வந்த விளையாட சம்ம்மதம் தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
இது குறித்து பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,
ஆப்கன் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி நடத்துகிறது. 5 நாள் போட்டிக்கு உங்களை வரவேற்கிறேன் என பதிவட்டிருந்தார்.
மேலும், ஆபகானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அடிப் மாஷால் இது குறித்து பதிவிட்டுள்ளார்,
இந்தியாவில் சென்று நாம் முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள போகிறறோம். சரியாக தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும். இதற்கு பிசிசிஐக்கு நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.