உள்ளூர் டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் வலது கை ஆட்டக்காரரான ஷபிகுல்லா ஷபக் இரட்டை சதம் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். 71 பந்துகளில் 214 ரன் அடித்து புதிய உலகசாதனை படைத்தார். அந்த இன்னிங்சின் போது 21 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரி அடித்தார் ஷபக்.
காடீஸ் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடிய அவர் சிறப்பாக விளையாடி எதிரணியின் பந்துவீச்சை நாளா பக்கமும் விளாசினார். இதனால் அவரது அணி 20 ஓவர் முடிவில் 351 ரன் அடித்தது. இந்த இலக்கை நெருங்குவது கஷ்டம் தான். இந்த இலக்கை துரத்திய எதிரணி 107 ரன்னுக்கு சுருண்டது. இதனால், அவரது அணி 244 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வருடத்தில் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிப்பது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு டெல்லியை சேர்ந்த மோஹித் அல்ஹவாட் உள்ளூர் டி20 போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
இவரது அதிரடி ஆட்டத்தை கண்டு இவரை இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் இவரது பெயர் இருந்தது. ஆனால், இவருடைய ஆரம்ப தொகை வெறும் 10 லட்சம் இருந்தும், எந்த அணியும் இவரை வாங்கவில்லை.
இப்போது டி20 போட்டிகளில் 200 ரன்னை அசால்டாக அடிக்கிறார்கள். இனி வரும் போட்டிகளில் ஒரு வீரர் ஒரே இன்னிங்சில் 300 ரன் அடித்தால் கூட ஆச்சரிய படுவதற்கு இல்லை.