டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய பவுலர்களின் அணுகுமுறைக்கு கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் அஜித் அகர்கர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு உஸ்மான் கவஜா மற்றும் ஹெட் இருவரும் சேர்ந்து 61 ரன்கள் அடித்தனர். ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த லபுஜானே 3 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய பவுலர்களை நன்றாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவர் 38 ரன்கள் வரை அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு கவாஜா மற்றும் ஸ்மித் இருவரும் சேர்ந்து 79 ரன்கள் அடித்தனர். அடுத்து உள்ளே வந்த பீட்டர் ஹன்ஸ்கோம் 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
ஐந்தாவது விக்கெட் களமிறங்கினார் கேமரூன் கிரீன். இவர் வழக்கமாக அதிரடியான அணுகுமுறையை கொண்டவர் பந்து பழசாக இருந்தபோது உள்ளே வந்து ஸ்பின்னர்களை அடிக்க துவங்கினார். பின்னர் 82 வது ஓவரில் புதிய பந்தை எடுத்தது இந்திய அணி. அப்போதிருந்து இன்னும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இவர் வந்த பிறகு ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் விரைவாக அதிகரித்தது.
கடைசி பத்து ஓவர்களில் 54 ரன்களை ஆஸ்திரேலிய அணி அடிக்கும் அளவிற்கு இவரது அதிரடி இருந்தது. உமேஷ் யாதவ் மோசமான பந்துகளை வீசி இந்த அதிரடிக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தார். அடுத்து வந்த சமி, அஸ்வின் ஆகியோரும் ரன்களை வாரி கொடுத்தனர்.
நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய பவுலர்கள் எந்தவித திட்டமிடலும் இன்றி பந்து வீசினர். அவர்களது பந்துவீச்சில் சுத்தமாக தாக்கம் இல்லை. நாளை முடித்துவிட்டு செல்லலாம் என்று தூக்கத்தில் பந்து வீசியது போல இருந்தது என விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர். அவர் பேசியதாவது:
அவர்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதேநேரம் இந்திய பவுலர்கள் அணுகுமுறை சொர்ந்துவிட்டது போல தெரிந்தது. உமேஷ் யாதவ் முதல் ஓவரில் இருந்தே அவரது ரிதத்தில் இல்லை. ரன்களை வாரிகொடுத்தார்.
வெயிலில் நீண்டநேரம் நின்ற பிறகு பந்துவீசியதால் என்னவோ, உமேஷ் யாதவ் பவுலிங் பிடிப்புடன் இருந்தது. அதை பயன்படுத்திக்கொண்ட கேமெரூன் கிரீன் பவுண்டரிகளாக அடித்துவிட்டார்.
ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், ஒருசில பந்துகளை தவிர மற்றவை மோசமாகவே இருந்தது. அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கும் எடுபடவில்லை. ரோகித் சர்மா நன்றாக பவுலர்களை பயன்படுத்தினார் ஆனால் அவருடைய எதிர்பார்பிற்கு அவர்கள் கொடுக்கவேண்டும் அல்லவா?.” என்றார்.