ஐபிஎல் ஆட்டங்களின் கடைசி ஓவர்களில் அதிகமாக ரன்களைக் கொடுப்பவர்களை டிண்டா ஆர்மி என ரசிகர்கள் சிலர் கிண்டலடிப்பதுண்டு. ஆனால் இதை ஒரு ஐபிஎல் அணியே செய்தால்?
கடந்த வாரம் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில், 3 விக்கெட்டுகளை ஆர்சிபியின் உமேஷ் யாதவ் வீழ்த்தியபோது, டிண்டா அகடமியா, யார் அது? என்று உமேஷுக்கு ஆதரவாக ஒரு ட்வீட்டை வெளியிட்டது ஆர்சிபி அணி. ஆனால் தேவையில்லாமல் டிண்டாவை இழுப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியதால் அந்த ட்வீட் நீக்கப்பட்டது.
ஆனால் டிண்டா விடவில்லை. பொறுப்பில்லாமல் ட்வீட் செய்ததாக ஆர்சிபி அணி நிர்வாகத்தைக் குற்றம் சுமத்தினார் டிண்டா.
ஆனால், ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல் அமைதியாக இருக்கும் தன்னை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்த ஆர்சிபி அணிக்குதகுந்த பாடம் கற்பிக்க டின்டா முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு தனது இன்ட்ராகிராம் பக்கத்தில் தன்னுடைய பந்துவீச்சு சாதனைகளின் விவரங்களை வெளியிட்டு கடுமையாக கருத்துக்களை பதிவிட்டார். அதில் ” வெறுப்பாளர்களே, இந்த சரியான புள்ளிவிவரங்களைப் பெற்றுப் பேசுங்கள் இது உங்களுக்கு உதவும். என்னை வெறுமனே பார்க்காமல் பேசுவதையும் நிறுத்துங்கள். உங்களின் சுயவெறுப்புகளை மூடுங்கள், என்னைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து வாயை மூடுங்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபியின் ட்வீட்டுக்குப் பிறகு என் மீது ஏராளமான விமரிசனங்கள் வருகின்றன. முதலில் இதற்கு எதிர்வினையாற்றவேண்டாம் என நினைத்தேன். ஆனால் நிலைமை கைமீறிப் போய், மக்கள் என் குடும்பத்தையும் என் மனைவி, மகளையும் மோசமான வார்த்தைகளால் விமரிசனம் செய்ய ஆரம்பித்தார்கள். அதுபோன்ற மோசமான வார்த்தைகளை எந்தத் தந்தையும் அனுசரித்துப் போகமாட்டார்.
35 வயது அசோக் டிண்டா, 13 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 115 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 417 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2017-க்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் டிண்டா விளையாடவில்லை.