பாகிஸ்தான் அணியை இந்தியாவில் விளையாட இந்திய அரசு எதிர்ப்பதற்காக, அடுத்த வருடம் நடக்கும் ஆசிய கோப்பை இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
நவம்பர் 21ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இந்தியாவில் ஆசிய கோப்பை நடத்தலாமா வேண்டாமா என்று இன்னும் இந்திய அரசு உறுதியான பதில் அளிக்கவில்லை என தகவல் வந்தது.
“19 வயது உட்பட்டோர்கள் பாகிஸ்தான் அணியை இந்தியாவில் விளையாட அனுமதி கொடுக்கவில்லை என்றால், எங்களால் 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையையும் நடத்த வாய்ப்பில்லை. ஏசியன் அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கொடுக்க பட்டது, ஆனால் கிரிக்கெட் போட்டிக்கும் இது போன்ற போட்டிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என அரசு கூறுகிறது. மீண்டும் அரசிடம் கேட்டோம், ஆனால் இதுவரை எந்த பதிலும் பெறவில்லை. இதை பற்றி விரைவில் முடிவெடுத்து ஐசிசி-யிடம் கூற வேண்டும்,” என பிசிசிஐ அதிகாரி கூறினார்.
கடந்த ஐந்து வருடத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பல தொடரில் விளையாடியுள்ளன, ஆனால் 2012/13 தொடருக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் மோதவில்லை. கடைசியாக இந்தியாவிற்கு இருதரப்பு தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி ஐந்து வருடத்திற்கு முன்பு வந்தது. இந்த இரண்டு அரசுகளும் இருக்கும் முடிவில், இனி இந்த இரண்டு அணிகள் மீண்டும் இருதரப்பு தொடரில் விளையாட வாய்ப்பில்லை என தெரிகிறது. ஆனால், ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் மோதும்.
பிசிசிஐ அதிகாரி அனுராக் தாகூர் ஐசிசி தொடரில் கூட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவேண்டாம் என கூறி இருக்கிறார், ஆனால் கிரிக்கெட் நிர்வாக குழு ஐசிசி தொடர்களில் விளையாடட்டும் என கூறியுள்ளது.
U19 ஆசிய கோப்பை மலேசியாவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு பெங்களூருவிற்கு மாற்றியுள்ளார்கள், ஆனால் பாகிஸ்தான் அணி வரமுடியாது என கூறியதால், மீண்டும் இடத்தை மாற்றவுள்ளார்கள். இதே நிலைமை தான் இந்த தொடருக்கும், பாகிஸ்தான் அணி வர மறுத்துவிட்டால், இந்திய அணி இந்த தொடரை நடத்த வாய்ப்பில்லை. அடுத்த ஆசிய கோப்பை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
கடந்த ஆசிய கோப்பை வங்கதேசத்தில் நடந்து. ஐசிசி டி20 உலகக்கோப்பை நடக்கவிருந்ததால், ஆசிய கோப்பையையும் டி20 போட்டியாக விளையாடினார்கள். அந்த தொடரை இந்திய அணி வென்று அசத்தியது.