ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்குகிறது. இதில் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில், கே.எல் ராகுல், விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுடன், ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் ஆகியோருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால், இதில் இந்திய அணி எப்படி செயல்படுகிறது, தற்போதைய இந்திய அணியால் டி.20 உலகக்கோப்பையை சமாளிக்க முடியுமா என்பதை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துள்ளனர்.
இந்திய அணிக்கும், விராட் கோலி போன்ற பல வீரர்களுக்கும் மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்டும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்க போகும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
3- சூர்யகுமார் யாதவ்;
பல வருட போராட்டத்திற்கு பிறகு கடந்த வருடம் இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், ஒரு சில போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து வருகிறார். இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் அளவிற்கு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை விளையாடியுள்ள 23 டி.20 போட்டிகளில் 672 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலம் சேர்த்து வரும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விராட் கோலி சரியான பார்மில் இல்லாதததால், சூர்யகுமார் யாதவ் சரியாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியால் எதிரணிகளை சமாளிக்க முடியும்.