ஒரு நாளைக்கு 100 முதல் 150 சிக்ஸர்கள் அடித்து பயிற்சியை மேற்கொள்கிறேன் என்று பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆசிப் அலி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 27ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு அணிகளும் 28ம் தேதி நடைபெறும் தங்களது முதல் போட்டியிலேயே ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.
இந்த தொடரில் வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் குறித்த பல்வேறு விஷயங்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆசிய கோப்பை தொடர் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்புகளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆசிப் அலி, ஆசிய கோப்பை வெற்றி பெறுவதற்காக ஒரு நாளைக்கு 100 முதல் 150 சிக்ஸர்கள் அடித்து பயிற்சியை மேற்கொண்டு வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசிப் அலி தெரிவித்ததாவது, “நான் பேட்டிங் செய்யும் இடம், ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்படும் என்பதால் பெரிய ஷாட்களை அடித்து பயிற்சியில் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது, இதனால் நான் ஒரு நாளைக்கு 100 முதல் 150 சிக்சர்களை அடித்து பயிற்சியை மேற்கொள்கிறேன், அப்பொழுதுதான் என்னால் ஒரு போட்டியில் நான்கு முதல் ஐந்து சிக்ஸர்கள் அடிக்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும், நான் டி20 போட்டியில் விளையாடினாலே எனக்கு எப்பொழுதும் நெருக்கடியிருக்கும். போட்டியில் லைன் மற்றும் லென்தை கணக்கிட்டு அடிக்க முயற்சி செய்வேன், ஒரே சாட்டை திரும்பத் திரும்ப அடிக்க மாட்டேன். மேலும் பவர் ஹிட்டிங்கை பொறுத்த வரையில் டேப்-பால்(Tape-ball) பயிற்சி செய்வதற்கு உதவியாக உள்ளது, அதில் பயிற்சி செய்யும் பொழுது பேட்டை நேராக வைத்து விளையாட வேண்டும் இதனால் நமக்கு அதிகமான கவனம் ஏற்படும், டி20 தொடரில் குறைந்த ஓவர்களே உள்ளதால் நாம் பெரிய ஷாட்கலை அடிக்க வேண்டும், எனக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் டேப் பாலில் பயிற்சி செய்வேன்” என்று ஆசிப் அலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.