விராட் கோலி வேண்டாம்… மூன்றாவது இடத்தில் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கம்பீர் !!

மிக சிறப்பான பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவை பேட்டிங்கில் மூன்றாவது வீரராக களமிறக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் மிரட்டல் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக திகழ்ந்ததை போன்று, ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றினார். நான்காவது வீரராக களமிறங்கி பயமே இல்லாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசியதோடு மொத்தம் 26 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து கொடுத்தார்.

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்தவகையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், சூர்யகுமார் யாதவை மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “சூர்யகுமார் யாதவ் மிக சிறப்பான பார்மில் உள்ளார், இதனை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சூர்யகுமார் யாதவை மூன்றாவது இடத்தில் களமிறக்கிவிட்டு, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவை நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் களமிறக்கினால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலு பெரும். சூர்யகுமார் யாதவ் எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து விளையாடக்கூடியவர், துவக்க வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டால் கூட சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படாத வகையில் பார்த்து கொள்வார், எனவே அவரை மூன்றாவது வீரராக களமிறக்குவதே சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.