கெய்ல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்த ஆஸ்திரேலிய ‘மீடியாவுக்கு’ தோல்வி கிடைத்தது.
கடந்த 2015ல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அப்போது வீரர்கள் ‘டிரசிங் ரூமில்’ பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் சைகை செய்ததாக, சிட்னி மார்னிங் ஹெரால்டு, தி ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இதற்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் கெய்ல். முடிவில் கெய்லுக்கு ரூ. 1.44 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என கோர்ட் தீர்ப்பு தந்தது.
இதை எதிர்த்து ஆஸ்திரேலியன் மீடியா குரூப் நியூ சவுத் வேல்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மறுபக்கம் நஷ்டஈடு தொகையை உயர்த்தி தர வேண்டும் என கெய்ல் அப்பீல் செய்தார்.. இரு தரப்பு வாதங்களை விசாரித்த கோர்ட், இரண்டு அப்பீலையும் தள்ளுபடி செய்தது.
யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிரீஸ் கெய்ல் தனது நாட்டிற்காக கிரிக்கெட் ஆடுகிறாரா இல்லையோ உலகம் முழுவதும் உள்ள டி20 கிரிக்கெட் தொடர்களில் ஆடி ரசிகர்களை ஆசுவாசப் படுத்தி வருகிறார். அவருக்கு தானாகவே ஒரு பெயர் கொடுத்து கொண்டதுதான் இந்த யுனிவர்சல் பாஸ் என்ற பட்டம்.
எப்போதும் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், 24 மணி நேரமும் சிரிப்பான முகத்திற்கும் பெயர் போனவர் அவர். அதே போன்று தனது இல்லத்தையும் தனக்கேற்றவாறு பல குதூகலத்துடனும் வடிவமைத்துள்ளார்.