ஐபிஎல் தொடரில் இந்த நாட்டு வீரர்கள் ஆடுவது சந்தேகம்!

இந்த ஆண்டு தொடங்கப்பட்டு பாதியில் நின்ற ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வைத்து நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்ற ஆண்டு இறுதியில் நடந்தவாறு செப்டம்பர் 20ஆம் தேதிக்கு மேல் துவங்கி அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்பொழுது பங்களாதேசை சேர்ந்த அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

பிஸியாக இருக்கப்போகும் வங்கதேச வீரர்கள்

பங்களாதேஷ் கிரிக்கெட் ஆபரேஷன் இயக்குனர் அக்ரம்கான் இது பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியபடி, வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பங்களாதேஷ் அணி வீரர்கள் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி, அதைத் தொடர்ந்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடக்க இருக்கின்றன.

அதற்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கின்றன.

இந்த தொடர் முடிந்தவுடன் பங்களாதேஷ் அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 போட்டிகளும், இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக உலக கோப்பை டி20 தொடர் நடக்க இருப்பதால் இந்த ஆண்டு முழுக்க மகளிர் அணி வீரர்களுக்கு நேரம் சரியாக இருக்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.

பங்களதேஷ் வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லை

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக பங்களாதேஷ் விளையாட இருக்கும் ஒரு நாள் போட்டிகள் உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் அடங்கும் என்பதாலும், அதனைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருப்பதாலும் நிச்சயமாக பங்களாதேஷ் வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அந்த அணி நிர்வாகம் அனுமதிக்கப் போவதில்லை.

எனவே அதன்படி ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாட வாய்ப்பு மிகவும் கம்மி எனத் தெரியவந்துள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.