நான் இல்லைனா இந்திய அணி ஒன்றுமே கிடையாது..? திமிர் பேச்சால் புதிய சர்ச்சையில் பயிற்சியாளர் !!

நான் இல்லைனா இந்திய அணி ஒன்றுமே கிடையாது..? திமிர் பேச்சால் புதிய சர்ச்சையில் பயிற்சியாளர்

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் பாங்கர், அணித்தேர்வுக்குழு உறுப்பினர் தேவங் காந்தி அறைக்குச் சென்று அவரையும் இந்திய கிரிக்கெட் அணித்தேர்வுக்குழுவையும் சரமாரியாக விமர்சனம் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் பயிற்சி என்பது நல்ல சம்பளம், பிற சலுகைகள் கொண்ட ‘பெரிய இடம்’ என்பதால் அங்கு பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது, அதே போல் பணம் புழங்கும் இடம் என்பதால் அங்கு பதவி வகிப்பவர்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் பதவியை இழக்க விரும்ப மாட்டார்கள். அனில் கும்ப்ளே விதிவிலக்கு.

இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பல்வேறு புகார்கள் காரணமாக நீக்கப்பட்டதாகக் கருதப்படும் சஞ்சய் பாங்கர், தேவங் காந்தி அறைக்குள் புகுந்து அவரையும் அணித்தேர்வுக்குழுவையும் கடுமையாக வசை பாடியதாக பிசிசிஐ வட்டாரம் ஒன்று ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது. அதாவது தன்னைச் சுற்றியே இந்தியா அணி செயல்பட்டு வருகிறது என்றும் தன்னை நீக்கினால் அணி படுத்து விடும் என்றும் மிரட்டல் கூச்சலிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதோடு மட்டுமல்லாமல் அப்படித் தன்னை நீக்க முடிவெடுத்தால் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தன்னை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் அணியில் தோனியை பேட்டிங் வரிசையில் முன்னாள் களமிறங்கச் செய்வதையும் சஞ்சய் பாங்கர் ஒப்புக் கொள்ளவில்லை என்று ஆங்கில ஊடக செய்தி ஒன்று தெரிவிக்கிறது, ஆனால் இவற்றினால் புகார்கள் எதுவும் எழவில்லை என்றாலும் அவரது நீக்கத்தின் பின்னணியில் இம்மாதிரி விவகாரங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் சஞ்சய் பாங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தரப்பில் ரவி சாஸ்திரியோ, மேலாளர் சுனில் சுப்ரமணியனோ அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே சஞ்சய் பாங்கர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.