இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் தனது ஓய்வை அறிவித்தார், அது மட்டும் இல்லாமல் இது தான் அவரின் கடைசி பிக் பாஷ் லீக் தொடர் மற்றும் அவர் மீண்டும் அவர் பிக் பாஷ் லீக் அணியுடன் ஒப்பந்தம் செய்ய மாட்டார். மெல்போர்னில் இன்று நடந்த போட்டியில் மெல்போர்ன் அணி தோற்ற பிறகு தனது ஓய்வை அறிவித்தார் பீட்டர்சன். இந்த சீசனை மெல்போர்ன் அணி மோசமாக தொடங்கியுள்ளது, விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி பெற்று பரிதாப நிலையில் இருக்கிறது. இன்றய போட்டியில் 30 பந்தில் 40 ரன் அடித்து அசத்தினார் கெவின் பீட்டர்சன்.
2013-14 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்த பிறகு கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரச்சனை வந்தது. அதன் பிறகு அவருக்கு இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் உலகில் நடக்கும் அனைத்து டி20 தொடர்களிலும் கலந்து கொண்டு விளையாடி வந்தார். மெல்போர்ன் அணிக்காக மூன்று சீசனாக அதிக ரன் அடித்தவர் பீட்டர்சன் தான்.
“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடியவுள்ளது. இந்த பிக் பாஷ் தொடரில் விளையாடி தான் என்னை பற்றி தெரியவேண்டும் என்று இல்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறேன், அப்போது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை எப்படி என்று தெரிந்திருக்கும். என்னுடைய வேலை அணிக்கு உதவி செய்வதும், இளம் வீரர்களுக்கும் உதவி செய்வது தான்,” என பீட்டர்சன் கூறினார்.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக 29 போட்டிகளில் விளையாடி இருக்கும் கெவின் பீட்டர்சன் 998 ரன் அடித்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 76 ஆகும்.சுர்ரே அணிக்காக விளையாட கடந்த ஐபில் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அடுத்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தான் அவருடைய கடைசி தொடர்.