ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் மீதான தடை நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக பிசிசிஐ அவர்களை சஸ்பெண்ட் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் பிசிசிஐ அவர்கள் மீதான தடையை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

தடையை ரத்து செய்ததையடுத்து பாண்டியா தற்போது நியூஸிலாந்து பயணத்தில் உள்ள இந்திய அணியுடன் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தேர்வுக்குழுவினர் கையில் உள்ளது, விராட் கோலிக்கு கடைசி இரு போட்டிகளுக்கும் டி20 தொடருக்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டதையடுத்து பாண்டியா செல்ல வாய்ப்புள்ளதாகவெ தெரிகிறது.

இந்தக் குற்றச்சாட்டு எழுந்த பிறகு வெளியே எங்கும் செல்லாமல் பாண்டியா வீடே கதியாகக் கிடந்ததாக அவரது தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

India Batting coach Sanjay Bangar with Hardik Pandya and Lokesh Rahul of India during the the 2nd T20I match between India and New Zealand held at the Saurashtra Cricket Association Stadium in Rajkot. 4th November 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டித் தொடரில் கடைசி 2 போட்டிகளிலும் டி20 தொடரிலும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலிக்குப் பதிலாக அணியை வழிநடத்தும் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றது. அதன்பின் அங்கிருந்து நியூசிலாந்து சென்ற இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

The second Test cricket match between India and Sri Lanka starts in Colombo on August 3. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

இதில் நேப்பியரில் நேற்று நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. 2-வது போட்டி 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடைசி இரு போட்டிகளுக்கும், டி20 போட்டித் தொடருக்கும் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.