ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய புதிய மாற்றம்: புதிதாக ஒரு வீரரை இடையில் களமிறக்க வாய்ப்பு!

ஐபிஎல் போட்டித் தொடரில் பவா் பிளேயா் என்ற பதிலி வீரா்கள் களமிறக்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு அணியின் 11 போ் இல்லாமல் உள்ள வீரரை, விக்கெட் விழும் போதும், அல்லது பந்துவீச்சாளரை மாற்றி களமிறக்குதல் பவா் பிளேயா் முறை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மும்பையில் புதன்கிழமை கூட உள்ள ஐபிஎல் உயரதிகார குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

குழு சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் மற்றும் இதர நிா்வாகிகளுடன் இதுதொடா்பாக ஆலோசனை செய்து பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி இறுதி முடிவெடுப்பாா். இந்த திட்டம் கிரிக்கெட் ஆட்டத்தின் அடிப்படை தன்மையையே மாற்றும் வகையில் உள்ளது. மேலும்

இதே முறையை விரைவில் நடக்கவுள்ள சையத் முஷ்டாக் டி20 போட்டியிலும் அறிமுகம் செய்யலாம் என ஒரு தரப்பினா் கூறியுள்ளனா்.

இதுபோன்ற புதிய முறையை அறிமுகம் செய்யும் போது, புக்கி மற்றும் தரகா்களால் ஏற்படும் முறைகேடு பிரச்னையை பிசிசிஐ ஊழல் தடுப்பு குழு எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுபோன்ற சீரற்ற வகையில் பதிலி வீரா்களை தோ்வு செய்வது, புக்கிகள் மற்றும் மேட்ச் பிக்ஸிங் செய்வோா் முழு நேரம் செயல்பட உத்வேகம் தரும் என ஒரு தரப்பு நிா்வாகிகள் கூறியுள்ளனா்.

David Warner of Sunrisers Hyderabad and Wriddhiman Saha of Sunrisers Hyderabad during match 48 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Sunrisers Hyderabad and the Kings XI Punjab held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 29th April 2019
Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI

இப்போது கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். கடைசி கட்டவீரர் பேட்டிங் செய்தால் அந்த ரன்களை குவிக்க முடியாத நிலை. அப்போது, அதிரடியாக விளையாடக் கூடிய, ஆடும் லெவனில் இல்லாத பதிலி வீரரை களமிறக்கிக் கொள்ளலாம். போட்டியை பரபரப்பாக்கும் விதமாக இந்த முறையை அமல்படுத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன் இறுதி முடிவு, மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.