இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸை கவுரவப்படுத்த நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கி லாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியவர் இவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் அவர் அடித்த 84 ரன்கள், இங்கிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் சிறப்பாக செயல்பட்டார்.
இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதன்முறையாகக் கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக் ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். உலகக் கோப்பை தொடரில் அவர் 465 ரன்களையும் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந் தார்.
இங்கிலாந்து அணிக்காக, பென் ஸ்டோக்ஸ் விளையாடினாலும் அவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தனது 12 வது வய தில் குடும்பத்தினருடன் இங்கிலாந்து சென்ற அவர், அந்நாட்டுக்காக விளையாடி வருகிறார். அவர் பெற்றோர் நியூசிலாந்துக்கு திரும்பி கிறிஸ்ட்சர்ச்சில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவரை கவுரவிக்க நியூசிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த வருடத்தின் சிறந்த நியூசிலாந்து நாட்டவர் என்ற விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவருடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உட்பட மேலும் சிலர் அந்தப் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்தின் தலைமை நீதிபதி கேமரூன் பென்னட், ஸ்டோக்ஸ் கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்த காரணத்தால், சிலர் அவரை நியூசிலாந்தின் சொந்தக்காரர் என்று கூற முயற்சிக்கிறார்கள்.
அவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடவில்லை என்றாலும் கூட, அவருடைய பெற்றோர் இன்னும் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் வசித்து வருகின்றனர். அதனால் அவருக்கு விருது கொடுக்கலாம் என்கிற முடிவில் ஒரு சில நியூசிலாந்து மக்கள் தெளிவாக உள்ளனர்.
அதேசமயம் நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்ற கேன் வில்லியம்சன் பெயர் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.