தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே மிகச் சிறப்பாகக் கையாண்ட சர்டுள் தாகூரை பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது குறித்து இங்கு காண்போம்.
5,ரவிச்சந்திர அஸ்வின் (2019)
2019ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் அடித்த அசத்தியது.
அதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் மிகப் பிரமாதமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கியது, அந்த போட்டியில் ரவி அஸ்வின் 145 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மிகப் பெரும் உதவியாக இருந்தார்.