ஜஸ்பிரித் பும்ரா 2016ம் ஆண்டு 27 வயதில் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார். அன்று தொடங்கி இன்றுவரை இந்திய அணிக்காக மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார். மொத்தமாக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளையும், 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளையும், அதேசமயம் 49 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
இந்திய அணிக்காக கிடைத்த ஒரு மிகப்பெரிய பரிசு இவர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஜஸ்பிரித் பும்ரா பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவருடைய பவுலிங் ஸ்டைல் அவருடைய பந்து வீச்சை பலப்படுத்துகிறது
ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசுவது ஏறக்குறைய மலிங்கா பந்து வீசுவது போலவே வித்தியாசமாக உள்ளது. என்னைப் பொறுத்த வரையில் அவருடைய பந்துவீச்சு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அவருடைய பவுலிங் ஸ்டைல் அவருக்கு கிடைத்த பரிசு என்று கூற வேண்டும்.
அவர் வித்தியாசமாக பந்து வீசுவதலாயே எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளை மேற்கொள்ள சிரமப்படுகிறார்கள். இது அவருக்கு மிகப்பெரிய அட்வான்டேஜாகஅமைந்து இருக்கிறது. மேலும் அவர் அனைத்து வகையான பவுலிங் வேரியேஷன்களை காட்டி வருகிறார்.
எதிரணி பேட்ஸ்மேன் எப்படி விளையாடுகிறாரோ அதற்கு தகுந்தவாறு பவுன்சர், யார்க்கர், ஷார்ட் பால், ஆஃப் கட்டர், லெக் கட்டர் என பலவகையான பந்துகளை அவர் வீசி வருகிறார். நிச்சயமாக இந்திய அணிக்கு வருங்காலத்தில் நிறைய வெற்றிகளை அவர் வாங்கி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்று இறுதியாக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறி முடித்தார்.
இப்பொழுது ஜஸ்பிரித் பும்ரா நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கின்ற டெஸ்ட் தொடரிலும் விளையாட தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.