சாம்பியன்ஸ் ட்ராபி 2017: போட்டிக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான்

ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 124 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் 54க்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

பக்கர் ஜமான் அடித்த சதத்தால் பாகிஸ்தான் அணி 338 என வலுவான ஸ்கோரை அடித்தது. அந்த இலக்கை துரத்திய இந்திய அணி 158 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து அணியுடன் விளையாடாத பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 16 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

 

இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் மட்டும் நன்றாக பந்து வீச, மற்ற வீரர்கள் எக்ஸ்டராசை வாரி கொடுத்தனர் (13 வைட் மற்றும் 3 நோ-பால்).

ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.ஸ். தோனி ஆகியோர் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி தடுமாறியது. ஆனால், ஹர்டிக் பாண்டியா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். ஆனால், அவர் ரன்-அவுட் ஆனதுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு வெற்றி உறுதி ஆனது.

போட்டிக்கு பிறகு தோல்வியை ஒப்பு கொண்டார் விராட் கோலி.

“பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்தை தெரிவிக்கிறேன். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என நிரூபித்து இருக்கிறார்கள். தோல்வியடைந்ததற்கு வருத்தமாக தான் இருக்கிறது, ஆனால் இறுதி போட்டி வரை வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது,” என விராட் கோலி கூறினார்.

இதற்கு பின் பல பேர் இவரை பாராட்டினர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.