அரையிறுதியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த அணி தான்; உறுதியாக சொல்லும் சேத்தன் சர்மா !!

அரையிறுதியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த அணி தான்; உறுதியாக சொல்லும் சேத்தன் சர்மா

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்காவது அணி எது என்பது குறித்தான தனது கணிப்பை சேத்தன் சர்மா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் லீக் போட்டி அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நான்காவது இடத்தை பிடிக்க நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.

நான்காவதாக அரையிறுதிக்கு தகுதி பெறும் அணியே இந்திய அணியுடன் அரையிறுதி சுற்றில் விளையாடும் என்பதால், நான்கவது இடத்தை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தநிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சேத்தன் சர்மா, நான்காவதாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணி குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சேத்தன் சர்மா பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணியே நான்காவது இடத்தை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என கருதுகிறேன். நியூசிலாந்து அணி தனது அடுத்த போட்டியில்  இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இலங்கை அணியை விட அனைத்து வகையிலும் பலத்துடன் இருக்கும் நியூசிலாந்து அணியால் இலங்கையை இலகுவாக வீழ்த்த முடியும் நியூசிலாந்து அணி இலகுவாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பதே எனது கருத்து. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் நியூசிலாந்து அணியின் ரன் ரேட் பாகிஸ்தான் அணியின் நிலைக்கு முன்னேறிவிடும், அதே போல் பாகிஸ்தான் அணியால் இங்கிலாந்து அணியை இலகுவாக வீழ்த்திவிட முடியாது, எனவே தான் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.