கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்கிறார் புஜாரா !!

Pujara had signed a deal with the County several weeks ago but the announcement was purposely postponed to account for the Indian Premier League Auction © Getty

கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்கிறார் புஜாரா

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் புஜாரா இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தனக்கென கெட்டியாக ஒரு இடத்தை புஜாரா பிடித்து வைத்திருந்தாலும், அவரால் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெற முடியவில்லை. தவிர உள்ளூர் தொடர்களான ஐ.பி.எல் போன்ற தொடர்களிலும் இவரை யாரும் விலை கொடுத்து வாங்குவதில்லை.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாட புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யோர்க்‌ஷைர் பிக்ஸர் அணிக்காக புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை, அந்த அணி நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்காக ஏப்ரல் மாதம் இங்கிலாந்து செல்லும் புஜாரா “ஜுன் 14-18-ல் இந்தியாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக இந்தியா திரும்பும் புஜாரா மீண்டும் ஜுன் 20 முதல் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் கலந்துகொள்கிறார். அதன்பின்பு ஆகஸ்ட் 1 முதல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புஜாரா பங்கேற்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தபிறகும் யார்க்‌ஷையர் அணிக்காக கவுன்டி போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.  இதே போல் நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேன் வில்லியம்சனும் இதே அணிக்காக விளையாட உள்ளார்.

 

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள புஜாரா “எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் மிகப்பெருமையாக கருதுகிறேன். சச்சின், யுவராஜ் சிங்கை தொடர்ந்து நானும் கண்ட்ரீ கிளப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்களுக்காக விளையாட உள்ளது எனக்கு கிடைத்த பாக்கியம், என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு நிச்சயம் கை கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.