கொல்கத்தாவிற்கு பலம் சேர்க்க வரும் கிறிஸ் லின்

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10வது லீக் தொடர் நடந்து கொண்டு வருகிறது. இனி வரும் போட்டிகள் தான் அனைத்து அணிகளுக்கும் முக்கியம். இந்த நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் ஆஸ்திரேலியா வீரர் கிறிஸ் லின் காயத்தில் இருந்து விடுபட்டு வருகிறார் என தகவல் வந்தது.

ஏப்ரல் 9 அன்று மும்பை இந்தியன்ஸுக்கு நடந்த போட்டியின் போது தோள்பட்டை காயம் ஏற்பட்டது. அதே தோள்பட்டையில் இரண்டு வருடத்தில் மூன்றாவது முறையாக காயம் ஏற்பட்டது.

“காயம் ஏற்பட்டதில் இருந்து அவர் கொல்கத்தாவிலேயே தங்கி விட்டார். அவர் இப்பொழுது கொஞ்ச கொஞ்சமாக பயிற்சியில் ஈடுபடுகிறார்,” என கொல்கத்தா பந்துவீச்சாளர் கோலின் டி க்ராந்தோம்மே கூறியுள்ளார்.

“என்னுடைய தோள்பட்டை காயத்தில் இருந்து நான் கொஞ்ச கொஞ்சமாக விடுபட்டு வருகிறேன். நான் மறுபடியும் பேட்டிங் ஆட போகிறேன் என்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கிறது. ஐபில் இறுதி போட்டிக்கு முன்பு ஓரிரு போட்டிகள் விளையாடவேண்டும்,” என கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் லின் திரும்பி வருவதால் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கும். கொல்கத்தா அணி விளையாடிய 10 போட்டிகளில் 7 போட்டியில் வென்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில உள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கொல்கத்தாவின் பிளே-ஆப் ஆட்டம் உறுதி ஆகும்.

கிறிஸ் லின் திரும்பி வருவதால் இனிமேல் சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக பார்க்க முடியாது. கிறிஸ் லின் இல்லாத நேரத்தில் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார் சுன்னி நரைன்.

இந்த ஐபில்-இல் 2 போட்டிகளில் விளையாடிய கிறிஸ் லின் 125 ரன் அடித்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.