உருவாகப் போகிறது இரண்டாவது தமிழ் அணி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணை உறுப்பினராக சேர புதுச்சேரி கிரிக்கெட் வாரியம் விண்ணப்பித்திருந்தது. இந்த அனுமதி பற்றி ஆய்வு மேற்கொள்ள உச்ச நீதி மன்றம் ஒரு கமிட்டியை நியமித்திருந்தது.

இந்த மாத முதலில் நடந்த பொதுக்குழிவில் நடந்த கலந்தாய்வில் புதுச்சேரியயை முழு உருப்பினராக சேர்ப்பது பற்றி பேசப்பட்டது. மேலும், அதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

இதனைப் பற்றி, உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் உறுப்பினர் கூறியதாவது,

புதுச்சேரி அனுமதி வேண்டி அளித்த விண்ணப்பம் சரியானது. அனுமதிக்க கூடாது என 3 கமிட்டிகள் பரிந்துரைத்தது. ஆனால், புதுச்சேரியயை சேர்க்காமல் இருக்க எந்த ஒரு சரியான காரணமும் இல்லை. இதன் காரணமாக புதுச்சேரியை புதிய முழு வாரியமாக சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

எனக் கூறினார்.

குஜராத், ஆந்திரபிரதேசம், மஹராஸ்ட்ரா போன்ர மாநிலங்கள் தனிதனியாக இரண்டு கிரிகெட் வாரியங்களை வைத்து இரு அணிகள் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் ஆடி வருகிறது. தற்போது புதுச்சேரியை முழு அணியாக சேர்க்கும் பட்சத்தில் தமிழம் தொடர்பாக இரு அணிகள் கிடைக்கும்.

Ravichandran Ashwin of India celebrates the wicket of David Warner of Australia during day 3 of the 2nd Airtel Test match between India and Australia held at the The Rajiv Gandhi International Stadium in Hyderabad on the 4th March 2013
Photo by Ron Gaunt/BCCI//SPORTZPICS

மேலும், பல வீரர்கள் தமிழர்களாக இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்புகள் உள்ளது. தமிழக கிரிக்கெட் வாரியத்தில் சில தரன் தாழந்த அரசியல் நடைபெற்று வருவதாக பல ஆண்டுகளாக இருக்கிறது.

புதுச்சேரியை சேர்க்கும் பட்சத்தில் அந்த வாரியத்தில் பாகுபாடு இல்லாமல் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.
இதற்கிடையே, நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி முதலில் இருந்தே விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்
தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில் மற்றும் முன்ரோவின் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திய இந்திய பவுலர்கள் நிதானமாக பந்து வீசினர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி 230 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், பூம்ரா, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார் ரோகித் ஷர்மா 7 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி உதவியுடன் தவான் சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்தார்.
கேப்டன் கோலி 29 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். பின்னர், களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தயான் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. தவான் ஆட்டமிழந்தாலும் பாண்டியா சற்றே அதிரடி காட்டினார்.
46 ஓவர் முடிவுகளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 64 ரன்களுடனும், தோனி 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது.

Editor:

This website uses cookies.