நியூசிலாந்து அணிகள் நட்சத்திர ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜிம்பாவேயில் பிறந்து சர்வதேச நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடிய 36 வயதாகும் காலின் டி கிராண்ட்ஹோம் நியூசிலாந்து அணிக்காக மூன்று விதமான தொடரிலும் 125போட்டிகளில் விளையாடி சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
லிமிடெட் ஓவர் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக பார்க்கப்பட்ட காலின் டி கிராண்ட்ஹோம், நியூசிலாந்து அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1432 ரன்கள் மற்றும் 49 விக்கெட்களை வீழ்தியுள்ளார்.
குறிப்பாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக் கொடுப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
2012 முதல் நியூசிலாந்து அணிக்காக பங்காற்றிய இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.ஆனால் ஐபிஎல் தொடரில் இவரால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை, 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர், மொத்தமாக இதுவரை 25 போட்டிகளில் 303 ரங்களும் 6 விக்கெட்களை மட்டுமே வீழ்தியுள்ளார்.
இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் காயம் காரணமாகவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக காலின் டி கிராண்ட்ஹோம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, எனக்கு வயதாகி விட்டது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், தற்பொழுது பயிற்சிகள் மிகவும் கடினமாக இருக்கிறது, குறிப்பாக காயத்தினால் அவதிப்படுவதால் என்னால் சரிவர பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை, தற்பொழுது நான் என்னுடைய குடும்பத்திற்கு தேவை., கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு என்னுடைய எதிர்காலத்தை நான் புரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன், இது கடந்த சில வாரங்களாக என் மனதிற்குள் உறுத்தலாகவே உள்ளது. நியூசிலாந்து அணிக்காக விளையாடிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, 2012 முதல் நியூசிலாந்து அணிக்காக என்னுடைய சர்வதேச போட்டி பங்களித்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன், ஆனால் ஓய்வு அறிவிப்பதற்கு தற்பொழுது தான் சரியான நேரம் என்பதை உணர்ந்து இந்த ஓய்வை அறிவிக்கிறேன் ” என்று காலின் டி கிராண்ட்ஹோம் தெரிவித்துள்ளார்.