புதிய சாதனை படைத்த தல தோனி; வாழ்த்து சொன்ன சின்ன தல ரெய்னா !!

புதிய சாதனை படைத்த தல தோனி; வாழ்த்து சொன்ன சின்ன தல ரெய்னா

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் புதிய சாதனை படைத்த தோனிக்கு, சின்ன தல சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

இந்த போட்டி தோனியின் ஐபிஎல் கெரியரில் 194வது போட்டி. இதன்மூலம் ஐபில்லில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

193 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருந்த சுரேஷ் ரெய்னா தான், அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரராக இருந்தார். அவர் இந்த சீசனில் ஆடாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திடீரென இந்தியாவிற்கு திரும்பினார்.

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் விலகினார் என்றும், இனிமேல் சிஎஸ்கே அணிக்காக ஆடமாட்டார் என்றும் கூறப்பட்டுவருகிறது. ரெய்னாவை சிஎஸ்கே அணி இந்த சீசனில் மிகவும் அதிகமாக மிஸ் செய்கிறது என்பது மட்டும் நிஜம்.

இந்நிலையில், ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற தனது சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய தோனிக்கு, ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோனிக்கு வாழ்த்து தெரிவித்து ரெய்னா பதிவிட்ட டுவீட்டில், ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள் Mahi Bhai.. எனது ரெக்கார்டை நீங்கள் முறியடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்றைய போட்டியில் வெற்றி பெறவும் கோப்பையை வெல்லவும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தோனியுடன் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாகவே சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இருந்து விலகியதாக ஒரு தகவல் இருக்கும் நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா தோனிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.