கரோனா வைரஸ் நேரத்தில் மீண்டும் இந்தியர்களைப் பற்றி பேசிய சவுரவ் கங்குலி!

Former cricketer Sourav Ganguly, newly-elected president of the Board of Control for Cricket in India (BCCI), speaks during a press conference at the BCCI headquarters in Mumbai on October 23, 2019. - Former captain Sourav Ganguly was unanimously elected on October 23 as president of India's troubled cricket board, the sport's most powerful body. (Photo by Punit PARANJPE / AFP) (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

முன்னாள் இந்திய கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி சமூக விலகல் என்பது ஒர் புதிய ஒற்றுமை என்பதோடு கரோனாவை இதுவரை உலகம் காணாதது, இனிமேலும் காண முடியாமல் கூட போகக்கூடியது என்று கூறியுள்ளார்.

டிடி நியூஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில் கங்குலி கூறியதாவது:

உள்ளுக்குள் இருங்கள், நோய்த்தடுப்புச் சக்தியை பராமரியுங்கள், சமூக விலக்கல் என்பது புதிய ஒற்றுமை, புதிய நல்லிணக்கம் என்பதையும் முக்கியமாக கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இது நமது தேசியக் கடமை என்பதையும் உணர்க.

உலகம் முழுதும் இது கடினமான காலக்கட்டம், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் நாம் நிமிர்ந்து நின்று இதை எதிர்கொள்வோம். பிரதமர், முதல்வர்கள், சுகாதாரத்துறை முயற்சி செய்கின்றனர், போலீஸ் நல்ல பணியாற்றி வருகிறது.

SYDNEY, AUSTRALIA – JANUARY 2: Steve Waugh of Austalia and Sourav Ganguly of India walk out for the coin toss during day one of the 4th Test between Australia and India at the SCG on January 2, 2004 in Sydney, Australia. (Photo by Hamish Blair/Getty Images)

ஆனால் தனிமையை நாம்தான் பராமரிக்க வேண்டும். உத்தரவுகளை மதித்து பாதுகாப்பாக இருப்போம். நாம் ஒன்றிணைந்து பொறுப்பாக இருந்தால் இதில் வெல்லலாம். இது ஒரு அபாயகரமான வைரஸ், இதுவரை உலகம் இப்படியொன்றை கண்டதில்லை, உலகம் இனி இப்படி ஒன்றை காணாமலும் இருக்க வாய்ப்புள்ளது, இந்தக்கால ஒரு தனித்துவமான விதிவிலக்கான காலக்கட்டம், ஆகவே பொறுப்பாக இருப்போம், முக்கியமாக வீட்டினுள் இருப்போம் ஆரோக்கியமாக இருப்போம்.” என்றார்

மத்திய பிரதேசத்தில் சுகாதார பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று மட்டும்  புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்தது.
 ஏற்கனவே, கடந்த வியாழக்கிழமை  சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதையடுத்து, போபாலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வசித்து வரும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.