இந்திய கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க விருப்பங்கள் குவிகிறது

இந்தியா மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மான்ப்ரீட் ஹயூர் -இன் சிறப்பான ஆட்டம் நடந்து முடிந்த ஐசிசி மகளிருக்கான உலக கோப்பை -இல் இறுதி போட்டி வரை செல்வதற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது . உலக கோப்பையை முடித்து நாடு திரும்பும் மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மான்ப்ரீட் ஹயூர் -இக்கு வெகுமதி -கள் காத்து கொண்டிருக்கின்றன .

கேப்டன் மிதாலி ராஜ் ஒரு சதம் மற்றும் 3 அரைசதத்துடன் 409 ரன் -களை குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணிக்கு முதலாவதாகவும் , அனைத்து அணி – களில் இரண்டாவதாகவும் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் இடம் பிடித்து உள்ளார் .

ஹர்மான்ப்ரீட் ஹயூர் -இன் ஆட்டமும் சிறப்பாக இந்த உலக கோப்பை தொடரில் இருந்தது . மிகவும் முக்கியமான ஆட்டம் ஆன நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடினர் . நியூஸிலாந்து இக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் ஹர்மான்ப்ரீட் ஹயூர் 60 ரன் -கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தார் . ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் வெறும் 115 பந்துகளில் 171 ரன் கள் குவித்து அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார் . இங்கிலாந்து இக்கு எதிரான இறுதி போட்டியிலும் அரை சதம் அடித்தார் , எதிர்பாராத நிலையில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது . இந்தியா அணி தோல்வி அடைந்தாலும் , அனைவரும் மகளிர் அணியின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி வருகின்றனர் .

கல்ப் நியூஸ் -இல் கொடுக்கப்பட்ட தகவலின் படி பெரிய தயாரிப்பு நிறுவனுங்கள் மித்தாலி ராஜ் -இன் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க போட்டி போட்டு காத்து கொண்டிருக்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மான்ப்ரீட் -ஐ தங்களது வணிக தூதரக நிர்ணயிக்கவும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள் .

” எங்களுக்கு அதிகமான விருப்பங்கள் வருகின்றன , மித்தாலி ராஜ் -இன் வாழ்க்கை வரலாறை படம் எடுப்பது குறித்து . ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் இது குறித்து எங்களிடம் அணுகியது , மித்தாலி ராஜ் போட்டியின் போது புத்தகம் வாசிப்பது பிரபலம் ஆனதும் . மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் உதாரணமாக இரண்டு சக்கர வாகன நிறுவனங்கள் மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மான்ப்ரீட் -ஐ தங்களது வணிக தூதரக நிர்ணயிக்கவும் எங்களிடம் அணுகி வருகின்றனர் ” இவ்வாறு வருண் சோப்ரா , மெடலின் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் கல்ப் நியூஸ் -இக்கு தெரிவித்து உள்ளார் .

வருண் சோப்ரா சொல்கிறார் ஹர்மான்ப்ரீட்கவுர் பிக் பஸ் லீக் தொடரில் பங்கெடுத்தது அவருடைய சிறப்பான ஆட்டத்திற்கு ஒரு சிறப்பான காரணமாக அமைந்ந்தது .

“ஹர்மான்ப்ரீட் கவுர் கடந்த வருடம் நடந்து முடிந்த பிக் பஸ் லீக் தொடரில் பங்கெடுத்தது அவருடைய சிறப்பான ஆட்டத்திற்கு ஒரு சிறப்பான காரணமாக அமைந்ந்தது . டீ 20 தொடர்கள் அவ்ர்களுடைய சிறப்பான திறமை -களை வெளி கொண்டு வர மிகவும் உதவுகிறது . இக்கட்டான சூழ்நிலையில் எப்படி விளையாடுவது எனவும் ” இவ்வாறு வருண் சோப்ரா கூறினார் கல்ப் நியூஸ் -இக்கு

Asvin M: The man who changed his passion into reality.

This website uses cookies.