ஐ.பி.எல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிப் பெற்றன. இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிறப்பான மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ஸ்காட் குஜ்ஜெலின், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, சுப்மான் கில், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி குர்னே, பிரசித் கிருஷ்ணா.
சென்னை அணியைப் பொறுத்தவரை தோனி, கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், சாஹர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தனியொருவரை சார்ந்து இல்லாமல் பெரும்பாலும் கூட்டு முயற்சியிலே சிஎஸ்கே வெற்றி பெற்று வருகிறது.
அதேபோல், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். இருப்பினும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சாத்தியமே இல்லாத வெற்றிகளை தனது அதிரடி ஆட்டத்தால் சாத்தியமாக்குகிறார். எதிரணியிடமிருந்து வெற்றிகளை பறித்துவிடுகிறார்.
இந்நிலையில், சென்னை அணியின் வெற்றிக்கு ரஸ்ஸல் நிச்சயம் சவாலாகவே இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதனால், ரஸ்ஸல் விக்கெட்டை வீழ்த்துவதற்கு சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய வியூகம் வகுப்பார் என்று தெரிகிறது. ரஸ்ஸலை வீழ்த்தும் ஆயுதமாக இம்ரான் தாஹிர் இருப்பார் என்றே தெரிகிறது.
அதேபோல், ஹர்பஜன், ஜடேஜா, தாஹிர் ஆகிய மூவரில் யாரேனும் ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்து தோனி வியூகம் வகுக்க வாய்ப்புள்ளது. பின் கள வரிசையில் ரஸ்ஸல் களமிறங்குவதில், அதற்குள் முழு போட்டியினையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் இறுதியில் நெருக்கடியை கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறுகையில், “கொல்கத்தா அணியில் லின், தினேஷ் கார்த்திக், நரைன் உள்ளிட்ட சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால், ரஸ்ஸல் மீது மட்டும் கவனம் செலுத்த போவதில்லை” என்றார்.