சென்னை சூப்பர் கிங்ஸிற்கு கிடைத்துள்ள யுவராஜ் சிங் இந்த பையன் தான்… இளம் வீரரை பாராட்டி பேசிய கெவின் பீட்டர்சன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர் சிவம் துபேவை முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கியது.
மொத்தம் 70 போட்டிகள் கொண்ட நடப்பு ஐபிஎல் தொடர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 40 போட்டிகள் இதுவரை நிறைவடைந்துள்ளது, குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் இதுவரை 5+ வெற்றிகள் பெற்று, தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஓரளவிற்கு நன்றாகவே செயல்பட்டு வருகிறது. பந்துவீச்சில் சொதப்பினாலும், பேட்டிங்கில் வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. பேட்டிங்கில் சென்னை அணி வலுவானதாக இருப்பதற்கு டெவன் கான்வே, ரஹானே, சிவம் துபே ஆகியோர் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து 7 போட்டிகளில் 236 ரன்கள் எடுத்துள்ள சிவம் துபேவை முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் வெகுவான பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து கெவின் பீட்டர்சன் பேசுகையில், “சிவம் துபேவின் பேட்டிங்கில் ஒரு தனித்துவம் உள்ளது. சிவம் துபேவின் பேட்டிங் என யுவராஜ் சிங்கை நினைவுபடுத்துகிறது. சிவம் துபே மிக சிறப்பான வீரர்” என்று தெரிவித்தார்.