ப்ளெயிங் லெவனில் ட்விஸ்ட் கொடுத்த ரோகித்… இந்தியா முதலில் பவுலிங்!

பிளேயிங் லெவனில் ஒரு முக்கிய மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பந்துவீச்சை எடுத்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணிக்கு எதிராக உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை தக்கவைக்க முழு முழு முனைப்புடன் இருக்கிறது இந்திய அணி. இந்த முறையாவது வீழ்த்திவிட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனால் போட்டியில் பரபரப்பிற்கு சற்றும் குறைவு இருக்காது.

டெங்கு காய்ச்சல் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த கில் இப்போட்டியில் விளையாடுகிறார். இது இந்திய அணிக்கு நேர்மறையான செய்தியாக தெரிகிறது. அகமதாபாத் மைதானத்தில் மூன்று வித போட்டிகளிலும் சுப்மன் கில் சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார். ஆகையால் அவர் அணியில் இணைந்திருப்பது பலத்தைக்கொடுக்கிறது.

மாற்றம்

சுப்மன் கில் உள்ளே எடுத்து வரப்பட்டு இசான் கிஷன் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்த ஒரு மாற்றம் மட்டுமே இந்திய அணியில் செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணி எந்தவித மாற்றமும் செய்யாமல் களம் இறங்குகிறது.

இரு அணிகளும் தங்களது முதல் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்று இந்த போட்டியில் களம் காண்கின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் ப்ளெயிங் லெவன்:

இந்தியா (பிளேயிங் லெவன்):

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):

அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான்(கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

Mohamed:

This website uses cookies.