பகலிரவு ‘பிங்க்’ பால் ஆட்டத்தின் நேரம் வெளியீடு.. துவக்கம் மற்றும் முடியும் நேரம் இதோ..

இந்தியாவின் முதல் சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான துவக்கம் மற்றும் முடியும் என்னவென்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக ‘பிங்க்’ பந்தில் நடக்க இருக்கிறது.

தற்போது இந்தியாவில் குளிர்காலம் என்பதனால், 6 மணியளவில் இருந்தே பனிப்பொழிவு துவங்கி விடும். பனியின் காரணமாக பந்து ஈரமாகிவிட்டால் பந்துவீச்சாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நேரத்தை திட்டமிட்டுள்ளது பிசிசிஐ தரப்பு.

பகல்-இரவு போட்டி என்பது மதியம் 2 மணியளவில் துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் ஒன்றாகும். கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு மேல் பனிப்பொழிவு தாக்கம் உச்சத்தை பெறும் என்பதால் போட்டியை மதியம் 1 மணியளவில் துவங்கி இரவு 8 மணிக்கு முடிக்கும் வகையில் திட்டமிடும்படி, பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்தது.

A general view shows empty enclosures on the opening day of the first day-night Test between Pakistan and the West Indies at the Dubai International Cricket Stadium in the Gulf Emirate on October 13, 2016.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த பிசிசிஐ தரப்பு, பகலிரவு டெஸ்ட் போட்டியை பனிப்பொழிவிற்கு ஏற்றாற்போல திட்டமிட்டு, இன்று போட்டிக்கான நேரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்மாதம் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியின் முதல் செஷன் மதியம் 1 மணியளவில் துவங்கி 3 மணிவரை நடக்கும். 40 நிமிட உணவு இடைவேளை போல விடப்பட்டு, 2வது சேஷன் மீண்டும் 3.40 மணிக்கு துவங்கி 5.40 வரை நடக்கும். அதன்பின் 20 நிமிட தேநீர் இடைவேளைக்குப்பின், 3வது சேஷன் 6 மணிக்கு துவங்கி 8 மணி வரை நடைபெற்று, அன்றைய நாள் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கு, பல சிறப்பு விருந்தினர்களை வரவேற்க பிசிசிஐ திட்டமிட்டு அழைப்புகளும் விடுக்கப்பட்டன. வங்கதேச பிரதமர் அழைப்பை ஏற்று வருவதற்கு ஒப்புக்கொண்டார். பிரதமர் மோடி இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

Prabhu Soundar:

This website uses cookies.