டி வில்லியர்ஸ் தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் : புவனேஸ்வர் குமார் பாராட்டு

உலகின் சிறந்த பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் கூறினார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் வேகத்தில் தென்னாப்பிரிக்கா அணி 286 ரன்களுக்குள் சுருண்டது. பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே 12 ரன்கள் எடுப்பதற்குள் தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர்குமார் சாய்த்தார். எல்கர்(0), மர்க்ரம்(5), ஹசிம் அம்லா(3) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்தார். பின்னர் டிவில்லியர்ஸ் மற்றும் கேப்டன் டூபிளிசிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். டிவில்லியர்ஸ் 65 ரன்களில் பும்ராவின் பந்து வீச்சில் போல்டானார். இது பும்ராவில் முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.

சிறிது நேரத்தில் டூபிளிசிஸ் 62 ரன்னின் ஆட்டமிழந்தார். அதற்கு பின் வந்த வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி  286 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 43, பிலண்டர் 23, மகராஜ் 35, ரபடா 26, ஸ்டெயின் 16, மோர்கல் 2 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து, 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர்குமார், ’இந்த போட்டியை அருமையாகத் தொடங்கினோம். இதுபோன்ற ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியை விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அதிகமாக பந்து ஸ்விங் ஆகாது. இருந்தாலும் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினேன். அவர்கள் 25, 30 ரன்கள் அதிகமாக எடுத்துவிட்டார்கள்.  டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவர் எங்கள் பந்துவீச்சை பதம் பார்த்தது வருத்தமாக இருந்தது. அவரது விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி. இருந்தாலும் அவர்களும் சிறப்பாக பந்துவீசி இந்திய வீரர்களின் விக்கெட்டை சாய்த்துள்ளனர்’ என்றார்.

Editor:

This website uses cookies.