திடீரென ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்ற டிவில்லியர்ஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி !!

சவுத் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து விதமான தொடர்களில் இருந்து ஓய்வு அறிவிப்பதாக சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

37 வயதாகும் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு அறிவித்தார்.அதற்குப்பின் ஐபிஎல் தொடர் போன்றன வெளிநாட்டு தொடர்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக வலம் வந்து கொண்டிருந்தார். இவருடைய பங்களிப்பின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கோர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

இவருடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. இளம் வீரர்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாமல் சீக்கிரமாக தனது விக்கெட்டை இழந்தாலும், தனது அனுபவத்தாலும் அதிரடியான ஷாட்களாலும் தனது அணிக்கு எப்பொழுதுமே மிகப் பெரும் பக்கபலமாக திகழ்ந்த ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகப் பெரும் இழப்பாக அமைந்துவிட்டது.

சவுத் ஆப்பிரிக்கா அணியின் வீரராக இருந்தாலும் உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரிலிருந்து ( நவம்பர் 19) இன்று ஓய்வு அறிவிப்பதாக தனது சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/ABdeVilliers17/status/1461590034193297409?s=20

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இது ஒரு சிறந்த பயணம் ஆனால் நான் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வே அறிவிக்கிறேன், இருந்தாலும் வீட்டின் பின்புறம் எனது சகோதரருடன் நான் மிகவும் ஆனந்தமாக எப்பொழுதும் விளையாடுவேன், தற்போது எனக்கு 37 வயதாகி விட்டது முன்பை போல் என்னால் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை என்றும் அனைவருக்கும் நன்றி என்றும் அதில் தெரிவித்திருந்தார்

 

Mohamed:

This website uses cookies.