இன்று நடைபெறும் போட்டியில் பவுளிங் செய்யப் போகிறார் தோனி?

வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, நேற்று பந்துவீசி பயிற்சிபெற்றார்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. விராத் கோலி சதமடித்தார். ரஹானே 79 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.

இதற்கான வலைப்பயிற்சியில் நேற்று வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது விக்கெட் கீப்பர் தோனி, பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பந்து வீசுவதை, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்காணித்தார்.

ஏற்கனவே பல முறை பந்துவீசி பயிற்சி பெற்றிருக்கிறார் தோனி. அதே போல இந்த முறையும் பந்துவீசி பயிற்சி பெற்றார். ஆனால், களத்தில் பந்துவீசுவாரா என்பது தெரியாது.

தோனி, 2009-ல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பந்து வீசினார். பதினைந்தாவது ஓவரை வீசிய தோனி, அந்த ஓவரின் நான்காவது பந்தில் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் பந்துக்கு பலியானவர், டிராவிஸ் டோவ்லின். இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் ஹைலைட் தோனி எடுத்த விக்கெட்தான்!

Editor:

This website uses cookies.