தலைவன பத்தி எவனும் தப்பா பேச கூடாது; முன்னாள் வீரர் காட்டம் !!

தலைவன பத்தி எவனும் தப்பா பேச கூடாது; முன்னாள் வீரர் காட்டம்

தோனியின் ஓய்வு குறித்து யாரும் எதுவும் பேச தேவையில்லை, தோனியே அது குறித்து முடிவு செய்து கொள்வார் என முனாஃப் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது பாராமிலிட்டரி பிரிவில் பணிபுரிய விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. எனவே அவர் விரைவில் நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேல் தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“தோனி தனக்கு என்று ஒரு தனி திட்டத்தை வைத்திருப்பார். அதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் ஏற்கெனவே தெரிவித்திருப்பார். அவர் என்ன செய்யவேண்டும் என்று யாரும் அவருக்கு ஆலோசனை வழங்க தேவையில்லை.

India’s Mahendra Singh Dhoni looks at the sky as rain falls during the 2019 Cricket World Cup group stage match between India and Pakistan at Old Trafford in Manchester, northwest England, on June 16, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

1975ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சாதனைகளை தோனி 2007-15ஆம் ஆண்டுகளிலே செய்துவிட்டார். அவர் அனைத்து கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்று தந்துவிட்டார். ஆகவே தோனி மாதிரியான ஒரு வீரர் இந்திய அணியிலிருந்து எளிதில் தவிர்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.