நீங்களா திருந்திடுங்க அதான் உங்களுக்கு நல்லது… இங்கிலாந்து அணியின் படுதோல்விகளுக்கு இது தான் காரணம்; சோயிப் அக்தர் சொல்கிறார் !!

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்த தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் மிக மிக மோசமான தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அணி, கடைசி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் படுதோல்வியை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை வெறும் 229 ரன்களில் கட்டுப்படுத்தினாலும், பேட்டிங்கில் கடுமையாக திணறிய இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் இங்கிலாந்து அணியை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தரும் தன் பங்கிற்கு இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து சோயிப் அக்தர் பேசுகையில், “இங்கிலாந்து அணியை இந்திய அணி மிக இலகுவாக வீழ்த்திவிட்டது. இங்கிலாந்து அணிக்கு இது மிக மோசமான தோல்வியாகும். இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளுக்கு அவர்களுக்கு விளையாட்டு அனுகுமுறை தான் காரணம், டி.20 போட்டிகளில் விளையாடுவதை போன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினால் இது போன்று படுதோல்விகள் தான் கிடைக்கும். இங்கிலாந்து அணியிடம் ஒரு முறையான திட்டமே இல்லை என்றே கருதுகிறேன். யார் அடித்து விளையாட வேண்டும், யார் பொறுமையாக விளையாடி கடைசி வரை களத்தில் நிற்க முயற்சிக்க வேண்டும் என்ற அடிப்படையான திட்டம் கூட இங்கிலாந்து அணியிடம் இல்லை என்றே நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.