அது கொஞ்சம் கூட நியாயமே இல்லை; தான் ஜெண்டில்மேன் என நிரூபித்துள்ளார் இயான் மோர்கன் !!

அது கொஞ்சம் கூட நியாயமே இல்லை; தான் ஜெண்டில்மேன் என நிரூபித்துள்ளார் இயான் மோர்கன்

2019 உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து முதன் முதலில் சாம்பியன்களாகியிருக்கலாம் ஆனால் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு இந்த வெற்றி திருப்தி அளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஓவர் வரை சென்று சமன் ஆன நிலையில் பவுண்டரிகள் எண்ணிக்கையில் முடிவு செய்யப்பட்டதையடுத்து பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தி டைம்ஸ் இதழில் மோர்கன் கூறியதாவது:

இரு அணிகளும் நெருக்கமான முறையில் சவாலாக ஆடிய போட்டி இந்த மாதிரி முடிவடைந்தது, இந்த உலகக் கோப்பையை இந்த முறையில் வென்றது நியாயமல்ல. ஆட்டத்தில் எந்த ஒரு கணத்திலும் போட்டியை இரு அணிகளும் இழக்கும் நிலை இருந்தது என்று ஒருவரும் கூற முடியாது. மிகவும் சமச்சீரான ஆட்டமாக இருந்தது.

நான் பட்டவர்த்தனமாகவே தெரிவிக்கிறேன். என்ன நடந்ததோ அப்போது  நானும் இருக்கவே செய்தேன், எனக்குத் தெரியும். ஆனால் போட்டியின் முடிவில் நான் கையை வைக்க முடியாது. கோப்பையை வென்றதால் எனக்கு எதுவும் எளிதாகத் தெரியவில்லை. ஆனால் தோல்வியடைவது கடினம்.

ஓவர் த்ரோ குறித்து கப்தில் பேசியதாவது;

இந்த போட்டியில் நாங்கள் நன்றாக ஆடினோம். எதிர்பார்க்காத வகையில் வீரர்கள் அனைவரும் அற்புதமாக ஆடினார்கள் . 2 ரன் ஓடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸை எப்படியாவது ரன் அவுட் செய்து விட நினைத்தேன். ஆனால், வெகு வேகமாக ஓடி வந்து பந்தை எடுத்து வீசினேன். அது எதிர்பாராத விதமாக அவரது பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது.

இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட்டில் இப்படி நடப்பது சகஜம். ஆனால் அந்த இடத்தில் நடந்தது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதற்குப் பின்னர் எங்களால் மீண்டு வர முடியவில்லை. தற்போது அந்த இடத்தில் இருந்து விலக நினைக்கிறோம் இவ்வாறு பேசியுள்ளார் மார்ட்டின் கப்டில்.

Mohamed:

This website uses cookies.