சர்வதேச டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. கடைசியாக கடந்த 2108ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக மோசமாக இழந்ததால், எதிர்வரும் டெஸ்ட் தொடருக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
2018ல் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க இந்திய அணியும், கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை மிக மோசமாக இழந்ததற்கு பழி தீர்க்கும் முனைபில் இங்கிலாந்து அணியும் இந்த தொடரை எதிர்கொள்ளும் என்பதால், இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் பட்டேல் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, லோயர் ஆடர்களில் சிறப்பாக பேட்டிங் செய்தால் அதுவே இந்திய அணிக்கு மிகப் பெரும் பிளஸ் பாய்ண்ட் ஆக அமையும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் 8 மற்றும் 9வது இடங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தால் அது இந்திய அணியின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் ஆனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஸ்பின்னர்களுக்கு அந்த அளவிற்கு மைதானம் ஒத்துழைக்காது, இருந்தபோதும் இந்திய அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.மேலும் இங்கிலாந்து நாட்டின் பருவநிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் போட்டியை தீர்மானிப்பதே இந்த பருவநிலையாகத்தான் இருக்கும் என்பது கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய வீரராக களம் இறங்குவார்கள் மேலும் பேக்கப் வீரர்களாக அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்ஷர் பட்டேல் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 27 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத