இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் திடீர் மரணம்!!

Cricket bat and ball on green grass of cricket pitch

இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ராகேஷ் சுக்லா டெல்லியில் நேற்று உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தினர்.

இந்தியாவின் முதல் தர டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ராகேஷ் சுக்லா. இவர் டெல்லி மற்றும் பீகார் ஆகிய இரு அணிகளுக்காக முதல்தர போட்டிகளில் ஆடியுள்ளார். கீழ் வரிசை (6வது அல்லது 7வது) பேட்ஸ்மேனாக களமிறங்கும் இவர் நடுத்தர வரிசைக்கு நல்ல பலம் சேர்க்க கூடிய ஒருவராக இருந்துள்ளார். அதேநேரம் சுழல் பந்து வீச்சிலும் எதிரணிக்கு தடுமாற்றம் ஏற்படுத்தக்கூடிய வீரர் ஆவார்.

122 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ள இவர் 3798 ரன்களும், 295 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

1981-82 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 9வது வீரராக களமிறங்கி ராஜேஷ் பீட்டருடன் இணைந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் அதே ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகினார் ராகேஷ் சுக்லா.

அறிமுக போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 0 மற்றும் 70 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 82 ரன்களுக்கு 2 விக்கெட் என சற்று தடுமாற்றம் கொண்ட ஆட்டத்திற்க்கு பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. தொடர்ந்து டெல்லி அணிக்காக முதல்தர போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார்.

71 வயதான ராகேஷ் சுக்லா டெல்லியில் நேற்று தனது இல்லத்தில் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். இதனை அவரது குடும்பத்தினர் ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தினர்.

டெல்லி கிரிக்கெட் வாரியமும் இவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, “டெல்லி அணிக்கு இது ஒரு கருப்பு ட்

Mohamed:

This website uses cookies.