66 வயதான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ கொல்கத்தாவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நவம்பர் 30ஆம் தேதி சுமார் இரவு 10.30 மணி அளவில் தன்னுடைய கடைசி மூச்சை விட்டார் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ.
அவரது வீட்டின் குளியறையில் அவர் மயங்கி விழுந்து விட்டு இருந்தார். அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி படுத்தினார்கள்.


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ மரணம் அடைந்ததால், வெஸ்ட் பெங்கால் முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ அவருக்கு இரங்கல் தெரிவித்தார்.
1985ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக நியூஸிலாந்து அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ. அதன் பிறகு 1993, 1997, 2000 நடந்த உலகக்கோப்பையின் போது இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ.
1985ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக நியூஸிலாந்து அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ. அதன் பிறகு 1993, 1997, 2000 நடந்த உலகக்கோப்பையின் போது இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ.
இந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் விளையாடியதை நேரில் கண்டு கழித்தார் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ. இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி பெற்று ஏமாற்றியது.
இந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் விளையாடியதை நேரில் கண்டு கழித்தார் ஸ்ரீருபா போஸ் முகர்ஜீ. இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி பெற்று ஏமாற்றியது.