சூதாட்ட தரகர்கள் கொலை மிரட்டல்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் போலிசில் புகார்

சூதாட்ட தரகர்களால் கொலை மிரட்டல் வருகிறது என பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பிராஸ் நவாஸ். 68 வயதாகும் இவர், பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து பத்திரிகை மற்றும் இணைய தளத்தில் பேசி வருகிறார். மேலும் மேட்ச் பிக்சிங் குறித்து கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் தனக்கு சூதாட்டக்காரர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் ‘‘தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தனக்கும், தனது குடும்பத்தினற்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்பிராஸ் நவாஸ் பாகிஸ்தான் அணிக்காக 177 டெஸ்ட் விக்கெட்டுக்களையும், 63 ஒருநாள் விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.