சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறும் லீக் போட்டியில் முதலில் பவுலிங் செய்கிறது ஆர்சிபி அணி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள 24ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளசிஸ் பவுலிங் செய்வதாக முடிவு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சிசாண்டா மஹாலா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டதால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இலங்கை அணியை சேர்ந்த பதிரனா விளையாடுகிறார். ஆர்சிபி அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால், அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
சிஎஸ்கே அணி தனது சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவி இன்றைய போட்டிருக்கு வந்திருக்கிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்று தனது சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடுகிறது. இருப்பினும் சிஎஸ்கே அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நல்ல ரெக்கார்ட் இருப்பதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பற்றிய விவரங்களை பின்வருமாறு காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ்.
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இரு அணிகளும் தலா நான்கு லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகள் பெற்று இருக்கின்றன. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் நல்ல முன்னேற்றம் காணலாம் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.