உலக்கோப்பையை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தார் கம்பிர்!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின், வரும் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு அதிரடியான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவரது கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது.

தோனியின் கேப்டன்சி குறித்து இவர் சொன்ன கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கம்பீர் உலகக் கோப்பை தொடர் தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்தார் அப்போது அவர் வரும் உலகக் கோப்பை தொடரில் அஷ்வின் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

SYDNEY, AUSTRALIA – JANUARY 11: Hardik Pandya walks to the nets during the India ODI Series Training Session at SCG on January 11, 2019 in Sydney, Australia. (Photo by Matt King/Getty Images)

தமிழக வீரர் அஷ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் ஒருநாள் போட்டிகளில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் வருகைக்குப் பின்னால் அஷ்வினால் அணியில் இடம்பெற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா ஒருநாள் அணிக்குத் திரும்பினாலும் அஷ்வினால் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்குத் திரும்ப முடியவில்லை. முன்னதாக இதுதொடர்பாக பேசிய அஷ்வின் தான் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பேன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் வீரர் கம்பீர், “குல்தீப் யாதவ் மற்றும் சஹால் கடந்த ஒரு வருடமாகச் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர் எனினும் அஷ்வின் போன்ற ஒருவர் அணியில் இருக்க வேண்டும்.

உலகக்கோப்பை நடக்கவிருக்கும் இங்கிலாந்தில் அப்போது இருக்கும் காலநிலையும் அங்கிருக்கும் தட்டையான ஆடுகளங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் அதில் அஷ்வின் சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் வீரர்கள் ஓய்வு நேரத்தில் முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால், பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. இந்த ஆண்டு உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், வீரர்கள் தயாராக இருப்பது அவசியம். அவர்களுக்கு முதல்தரப் போட்டிகள் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார். தோனி தவான் போன்ற வீரர்கள் முதல்தர போட்டிகளில் விளையாடாதது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

தவான், ரோகித் சர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, சாஹல், அஸ்வின்,ராகுல், ஜசுபிரிட் பும்ரா

Sathish Kumar:

This website uses cookies.