இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜாவை வெகுவாக பாராட்டிய கௌதம் காம்பீர்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. 4ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175* ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் அபாரமான பேட்டிங்காலும் சிறப்பான பந்துவீச்சாலும் இந்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் இலங்கை அணி பரிதவித்தது, குறிப்பாக இரண்டு இன்னிங்சிலும் விளையாடிய இலங்கை மொத்தமே 352ரன்கள் தான் எடுக்க முடிந்தது, இதனால் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஜடேஜா தான், 7வது இடத்தில் பேட்டிங்கில் 175 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சிலும் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்தது.
காயத்தின் காரணமாக நீண்டநாள் ஓய்வில் இருந்து, பின் மாசான ரீ என்ட்ரி கொடுத்த ஜடேஜாவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஜடேஜாவை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், ஜடேஜா எப்பொழுதுமே ஒரு மாஸான வீரர் இவர் வெளிநாட்டு தொடர்களில் அதிகமான அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் இதன் காரணமாகவே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் சிறப்பாக செயல்பட முடிந்தது, இது ஆட்டம் ஜடேஜாவுக்கு இன்னும் அதிகமான தன்னம்பிக்கையை கொடுக்கும். ஜடேஜா 175 ரன்களை எடுத்து அசத்தி உள்ளார் என்பதை மட்டுமே நாம் பார்க்கிறோம் ஆனால் அதற்கு ஜடேஜா எவ்வளவு பாடுபட்டார் என்பதை சற்று நாம் கவனிக்க வேண்டும்,இதனால் தான் இந்திய அணி இவ்வளவு ரன்கள் எடுக்க முடிந்தது. சிறப்பான ஆட்டத்தின் காரணமாகத்தான் ஜடேஜாவை இந்தியா ஏழாவது இடத்தில் களமிறங்கியுள்ளது, இந்த சூழ்நிலையில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டதால், பின் வரும் காலங்களில் இதை வைத்து மதிப்பீடு செய்து கொள்ளலாம்”என்று காம்பீர் ஜடேஜாவை பாராட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.