இந்திய தேசிய கீதத்திற்காக 52 வினாடிகள் நிற்க முடியாதா? என இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர்,36. இந்திய அணி கடந்த 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை பைனலில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர்,36. இந்திய அணி கடந்த 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை பைனலில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
சமூகவிஷயங்கள் குறித்து தைரியமாக தனது கருத்துக்களை வெளியிடும் காம்பிர், பாதிக்கப்பட்ட ராணுவத்தினர் குடும்பத்தாருக்கு உதவி செய்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் திரையரங்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்துநிற்பது குறித்த விவாதத்தில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து காம்பிர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ பிடித்த ரெஸ்டாரண்ட் வெளியே 30 நிமிடங்கள் காத்திருக்க முடியும், கிளப்புகளுக்கு வெளியே 20 நிமிடங்கள் வரிசையில் நிற்க முடியும். தேசிய கீதத்திற்காக 52 வினாடிகள் நிற்பது கடினமா என்ன?’ என குறிப்பிட்டுள்ளார்