இந்த இரண்டு இந்திய வீரர்களை அணிக்கு சேர்த்துக்கொள்ளுங்கள்: ரோஹித் மற்றும் கோலிக்கு கம்பிர் வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய சிறந்த நிலைக்கு மிகச்சிறந்த முன் உதாரணமாக இருந்துள்ளார். இந்த உதாரணத்தை எடுத்துக்கொண்டு, தற்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் செயல்பட வேண்டும் என காம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமுறை வீரர்களான சுப்மான் கில், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ஆதரவு தேவை என தெரிவித்துள்ளார். தற்போது ரோஹித் சர்மா சீனியர் என்பதால் அவரிடம் இந்த ஆதரவை எதிர்பார்க்கிறேன். இளம் வீரர்களுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட வேண்டும்.

HAMILTON, NEW ZEALAND – JANUARY 29: Sanju Samson of India (L) celebrates his wicket of Martin Gutill with Shreyas Iyer of India (R) during game three of the Twenty20 series between New Zealand and India at Seddon Park on January 29, 2020 in Hamilton, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

ஒரு இளம் வீரருக்கு ஆதரவு எப்படி தேவைப்படும் என்பதற்கு ரோஹித் சர்மாவே மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அதனால் தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கிறேன். முன்னாள் கேப்டன் தோனி எப்படி இந்திய அணியை வளர்த்துவிட்டாரோ அப்படியே இவர்களும் செய்ய வேண்டும்” என்றார்.

AUCKLAND, NEW ZEALAND – JANUARY 26: Shreyas Iyer of India bats during game two of the Twenty20 series between New Zealand and India at Eden Park on January 26, 2020 in Auckland, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

இந்திய கிரிக்கெட் அணிக்காக ரோஹித் ஷர்மா, கடந்த 2007 இல் இந்தியா, அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் அறிமுகமானார். அன்று துவங்கிய ரோஹித், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமை பெற்றவர். அதே போல 50 ஓவர் கிரிக்கெட்டில் ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 2014 இல் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக 264 ரன்கள் விளாசினார்.

Sathish Kumar:

This website uses cookies.