இதே மாதிரி பண்ணீங்கனா கிரிக்கெட் வாழ்க்கையே போய்டும்; இரண்டு இந்தியர்களை எச்சரித்த கவாஸ்கர்!!

ரகானே மற்றும் புஜாரா இருவரும் கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என எச்சரித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரகானே மற்றும் புஜாரா இருவரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சில போட்டிகள் மட்டுமே 30, 40 ரன்கள் எடுத்து இருக்கின்றனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் முதல் போட்டி என தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக, இவர்களுக்கு இந்திய அணியில் இடம் கொடுத்து வருவது தவறு. ஒரு சில போட்டிகள் கட்டாயம் வெளியில் அமர்த்தி வைக்கப்பட்டு, அவர்களை உணரச் செய்ய வேண்டுமென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அனுபவமிக்க வீரர்கள் மிகவும் முக்கியம். அதேபோல் முந்தைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், சில நம்பிக்கையின் காரணமாகவும் வீரர்களை அடுத்த போட்டியிலும் எடுத்துச் செல்வர். ஆகையால் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இடைவிடாமல் விளையாடி வருகின்றனர்.

ஆனால் விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பொழுது, வெளியில் அமர்த்த வேண்டும். மேலும் ரகானே மற்றும் புஜாரா இருவரும் இதே போன்று தொடர்ந்து விளையாடி வந்தால், டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் இனி எடுக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் மற்றும் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

அவர் கூறுகையில், “முதல் இன்னிங்சில் ரகானே மற்றும் புஜாரா இருவரும் ஆட்டமிழந்த விதம் வைத்து பார்க்கையில் அவர்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. என்னும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன். அதற்குள் இருவரும் தங்களை நிரூபித்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து வெளியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் அடுத்தடுத்த தொடர்களில் அவர்களிடம் பெறுவதும் கடினம்.

இவர்களின் இடத்தை நிரப்ப ஏராளமான இளம் வீரர்கள் இருக்கின்றனர். அவர்களை பயன்படுத்த ரஹானே மற்றும் புஜாரா இருவரும் வழி விடவேண்டியிருக்கும். இறுதியில் அனுபவத்தை விட இந்திய அணியின் செயல்பாடு மட்டுமே முக்கியம். அனுபவம் எவ்வளவு தூரம் அணிக்கு உதவுகிறதோ, அதுவரை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். இவர்கள் இருவரும் அதனை உணர்ந்து விளையாட வேண்டும்.” என்றார்.

இரண்டாவது இன்னிங்சில் புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் இந்திய அணிக்கு நல்ல முன்னிலை கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.