சென்னையா? மும்பையா? எது சிறந்த அணி? ரோஹித் சர்மாவிடம் ஓப்பனாக கூறிய ஹர்பஜன் சிங்!

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 முதல் நடக்கிறது. இந்தாண்டுக்கான கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் போட்டிகள் இல்லாமல் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் பிஸியாக உள்ளனர்.

 

ஐபிஎல் அரங்கில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வெற்றி அணிகளாக உள்ளது. சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டமும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் நேரலையில், இரு அணிகளுக்கும் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் உரையாடினார்.

Bengaluru: Mumbai Indians player Harbhajan Singh during a practice session at Chinnaswamy Stadium in Bengaluru on May 10, 2016. (Photo: IANS)

அப்போது இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து ஹர்பஜன் சிங் பேசினார். இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில்,“ மும்பை இந்தியன்ஸ் அணி தொழில் முறை சார்ந்த அணி. அவர்க்ளுக்காக விளையாடுவது மிகவும் வேடிக்கையான விஷயமாக இருக்கும். அவர்களுக்காக 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளேன்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்பது என மிகவும் கடினமான கேள்வி. என்னைப் பொறுத்தவரையில் சிஎஸ்கே அணி மிகவும் ரிலாக்ஸான அணி. பெரிய அளவில் மீட்டிங் எதுவும் இருக்காது. வீரர்களின் விருப்பம் எதுவோ அதன்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார்கள். எல்லாம் கேப்டனாக இருக்கும் தோனியால் தான்.

போட்டி நாள் என்று கூட தெரியாத அளவு அவ்வளவு ரிலாக்ஸாக இருக்கும். இரு அணிகளிலும் மிகச்சிறந்த செட்டப்பாக இருக்கும். இந்த இரண்டு அணிகளிலுக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக உணர்கிறேன். அதே போல வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதில் சிஎஸ்கே அணி ஒருபடி மேல் தான். வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதும் மிகச்சிறந்த விஷயம் அதை சிஎஸ்கே அணியிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.